மாலை 6 மணிக்கான செய்திகள்

நவ 25 மாலை 6 மணிக்கான செய்திகள் தொகுப்பு

மாலை 6 மணிக்கான செய்திகள்

அரியலூர்  பேருந்து நிலைய கடையில் மேல் கூரையில் துளையிட்டு பணம் திருட்டு.
 முக்காடு போட்டுகொண்டு செல் போன் லைட் வெளிச்சத்தில் பணம் திருடிய  சிசிடிவி காட்சி வெளியீடு. சிசிடிவி காட்சியை வைத்து போலிஸ் விசாரணை
__________________________
விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து விக்கிரவாண்டிக்கு கடத்தி வரப்பட்ட 480 மது பாட்டில்கள், 2 சொகுசு கார்கள் பறிமுதல் - மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் நடவடிக்கை!
__________________________
கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டம். 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு குறு தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான உற்பத்தி இழப்பு -  தொழில் அமைப்பினர் தகவல்
__________________________
திருவாரூர் மாவட்டம்  முத்துப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 15 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை தர்கா பெரிய கந்தூரி கொடியேற்ற விழாவை ஒட்டி 15 மதுக்கடைகளை மூட ஆட்சியர்  ஆணையிட்டதையடுத்து மூடப்பட்டுள்ளது. 
__________________________
சென்னையில் உரிமம் புதுப்பிக்காத, உரிமம் இல்லாத கடைகள், வாடகை நிலுவை தொகை செலுத்தாத 70 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை பிராட்வே பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 70 கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைத்தது
__________________________
சென்னை: தாம்பரம் அருகே திரிபுரா போலீஸ் என்று கூறி தேநீர் கடை உரிமையாளர் கண்ணை கட்டி காரில் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அன்வர் உசேன், தாம்பரம் அருகே இரும்புலியூரில் தேநீர் கடை நடத்தி வருகிறார். கடந்த 22ம் தேதி காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திரிபுரா போலீஸ் என்று கூறி வழக்குக்காக அழைத்து கடத்திச் சென்றது.
__________________________
திருவள்ளூர்  வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1-வது நிலையில் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
__________________________
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இரட்டைக் கொலை தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. டிஎஸ்பி ராஜாமணி தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். உடையானம்பட்டியை சேர்ந்த சபரிமலை, குலசேகரநல்லூரை சேர்ந்த ரத்தினவேல்பாண்டியன் ஆகியோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
__________________________
தஞ்சாவூர்
கும்பகோணம் மடத்தில் பதுக்கி வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள 4 உலோக சாமி சிலைகள் பறிமுதல்-சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி

புதுக்கோட்டை அருகே ராங்கியத்தில் கதண்டு கடித்து 12 பேர் மருத்துவமனையில் அனுமதி.
__________________________