காஞ்சிபுரம் அருகே கருக்கு பேட்டை பகுதியில் அரசு பேருந்து தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதல்.

32 பேர் காயங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து வாலாஜாபாத் போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் அருகே கருக்கு பேட்டை பகுதியில் அரசு பேருந்து தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதல்.
காஞ்சிபுரத்திலிருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு வாலாஜாபாத் நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த தனியார் பேருந்தும் வாலாஜாபாத் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்துள்ளது.
அப்பொழுது காஞ்சிபுரம் அடுத்த கருப்பு பேட்டை பகுதியில் அதிவேகமாக வந்த தனியார் பயணிகள் பேருந்து எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
முகத்தில் அரசு பேருந்தில் முன் பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மற்றும் இரு பேருந்திலும் பயணம் செய்த பயணிகள் என 32 பேர் காயம் அடைந்தனர்.
 
காயம் அடைந்தவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு  உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காயம் அடைந்த 32 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
 
விபத்து குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,