திருவதிகை மகிமைகள் !!

பல்லவ மன்னன் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட கோவில்

திருவதிகை மகிமைகள் !!
1. திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆலயம் மூன்றாம் நந்திவர்மன் (பல்லவ மன்னன்) ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகும்.
 
2. சோழ, சேர, பாண்டிய மன்னர்கள் இந்த ஆலயத்தில் எண்ணற்ற திருப்பணிகள் செய்துள்ளனர்.
 
3. சங்க காலத்தில் வாழ்ந்த கடையெழ வள்ளல்களில் ஒருவனான காரியின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒன்றாக திருவதிகை இருந்தது.
 
4. மூன்றாம் ராஜராஜ சோழமன்னன் ஆட்சிக்காலத்தில் உள்நாட்டுப் போரால் திருவதியை பெரிய அழிவை சந்தித்தது. பிறகு வந்த பாண்டிய மன்னர்கள் திருவதியை புதுப்பித்து புத்துணர்ச்சி பெறச் செய்தனர்.
 
5. திருவதிகைக்கும் கடலூருக்கும் இடையே மிகப்பெரிய கோட்டையை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். 1746ம் ஆண்டு முதல் 1752ம் அண்டு வரை அந்த கோட்டை இருந்தது. ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் அந்த கோட்டைஅழிந்து போனது.
 
6. சென்னைக்கு அடுத்தப்படியாக திருவதிகையில்தான் ஆங்கிலேயர்கள் தங்கள் தலைமை இடத்தை அமைத்திருந்தனர். புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுப் படைகளை எதிர்க்க திருவதிகைதான் ஆங்கிலேயர்களுக்கு ஏற்ற இடமாக இருந்தது. எனவே திருவதிகையில் ஆங்கிலேயர்கள் மிகப்பெரிய ஆயுத கிட்டங்கி வைத்திருந்தனர்.
 
7. 'அதி அரையர்' என்ற சொல்லில் இருந்துதான் அதிகை என்பது தோன்றியது. அதுவே திருவதிகையாக மாறியது. அதி அரையர் என்றால் "வீரம் மிக்க தலைவர்கள்" என்று அர்த்தமாகும். அதாவது வீரம் மிக்க தலைவர்கள் வாழ்ந்த ஊர் என்று இதற்கு அர்த்தமாகும்.
 
8. திருவதியை தலத்து இறைவனுக்கு வீட்டான முடையார், வீரட்டான முடைய மகாதேவர், வீரட்டான முடைய நாயனார், முதலீஸ்வரர், வீட்டானமுடைய தம்பிரானார், வீரட்டர், வீரட்டத்தீசன், அதிகையரன், அதிகை அண்ணல், அதிகை நாயகர் என்று பல பெயர்கள் உண்டு.
 
9. திருவதிகை ஆலய நிர்வாகத்துக்காக பல சபைகள் இருந்தன. அவற்றில் திருவுண்ணாழிகை சபை என்ற அன்னதான சபை மிக சிறப்பாக இயங்கியுள்ளது.
 
10. திருவதிகையில் 9ம் நூற்றாண்டிலேயே "நகரத்தார் சபை" அமைத்து ஆலயத்திருப்பணிகளை செய்தனர்.
 
11. திருவதிகை ஆலயத்துக்கு மன்னர்கள் ஏராளமான தங்க காசுகளை கொடையாக கொடுத்துள்ளனர். வட மாவட்டங்களில் ஏராளமான சிற்றரசர்கள், பணக்காரர்கள் நில தானம் செய்திருந்தனர். அவை அனைத்தும் கால ஓட்டத்தில் காணாமல் போய் விட்டன.