பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தின் போது ஒலித்த பாடல் ரசித்துக் கேட்ட பிரதமர் மோடி

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அளித்த இரவு விருந்தின் போது ‘ஜெய் ஹோ’ பாடல் இசைக்கப்பட்டது.

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தின் போது ஒலித்த  பாடல் ரசித்துக் கேட்ட பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த 13-ந்தேதி(வியாழக்கிழமை) பிரான்ஸ் சென்றார்.

அங்கு அவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  தொடர்ந்து பிரான்ஸ் தேசிய தின கொண்டாடத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இதனிடையே  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சார்பில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தின் போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஆஸ்கார் விருது வென்ற 'ஜெய் ஹோ' பாடலை இசைக்குழுவினர் அரங்கேற்றினர். இந்த பாடலை இம்மானுவேல் மேக்ரானும், பிரதமர் மோடியும் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர். இந்த விருந்தில் நடிகர் மாதவனும் பங்கேற்றிருந்தார்.