காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவளே

அருளால் வெற்றிகளையும் அளித்துக் காக்கும் அம்பிகை இல் அபூர்வமான திருநாமம் கருக்கினில் அமர்ந்தவள்

காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவளே
kanchipuram-karukinil-amarnthaval

கருக்கினில் அமர்ந்தவள். இது என்ன பெயர்?, என்ன பொருள் இதற்கு? பனைமட்டை, பனங்கருக்கு என்று வழக்கில் சொல்வார்கள்.

பனை மரங்கள் நிரம்பிய பகுதியில் பனை மரத்தின் கீழே கோயில் கொண்டதால் கருக்கினில் அமர்ந்தவள்

அம்மன் மூர்க்கமான மனநிலையில் மகிஷனைக் கொன்று திரிசூலத்தால் வலது காலைத் தலையிலும் இடது காலைத் தொடையிலும் வைத்துக்கொண்டு இருக்கிறாள். இந்த இடம் ஒரு காலத்தில் பனைமரத்தோப்பாக இருந்ததால் அம்மன் பனைமரத்தடியில் அமர்ந்திருப்பதால் அம்மன் கருகினில் அமர்ந்தவள் என்று தமிழ் மொழியில் அழைக்கப்படுகிறார். மேலும், கருக்கு எனப்படும் மாலையும் இரவும் சேரும் நேரத்தில் அம்மனை வழிபட வேண்டும் என்று மற்றொரு பதிப்பு உள்ளது. (அந்தி வேலை)

.காஞ்சிபுரம். அழகான கோபுரத்துடன் கூடிய கோயில். ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் பல பல சன்னதிகள் உள்ளன. துர்கை அம்மன் , யோக துர்க்கை, சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, என்று மூன்று வடிவங்களாகத் தரிசனம் அளிக்கிறார்.

சர்ப்ப தோஷம் நீங்க வேண்டும் என்பதற்காகப் பலரும் இங்கே வந்து பிரார்த்தனை செய்கிறார்கள் பக்தர்கள். இங்குள்ள விசேஷ சன்னிதிகளில் ஜேஷ்டாதேவி சன்னதியும் ஒன்று. இந்த அம்பிகைக்கு இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி, தேங்காய் பழம் சமர்ப்பித்து வழிபட்டு வந்தால் திருமணம் கைகூடுகிறது என்பது பக்தர்களின் அனுபவம்.

பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் பிள்ளையார் பாளையம் என்ற இடத்தில் கோயில் உள்ளது.
காமராஜர் சாலையில் உள்ள மேட்டுத் தெரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, கோயில் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது.
பேருந்து நிலையம் முன்பு ஏராளமான ஆட்டோக்கள் உள்ளன.