ரோட்டு கடை பட்டாணி சுண்டல் மசாலா செய்வது எப்படி

ரோட்டு கடை பட்டாணி சுண்டல் மசாலா செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

பட்டாணி - 2 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
வெங்காயம் - 1,
தக்காளி - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,
பட்டாணியை சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

1) வாணலியில், எண்ணெய் ஊற்றி, சீரகம் போட்டு பொரிக்கவும்.

2) பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
3) அத்துடன், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

4) பின்னர், தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியதும் சேர்த்து கிளறவும்.

5) மசாலா கிரேவி பதத்திற்கு வந்ததும், வேக வைத்த பட்டாணி, சேர்த்து கொதிக்க வைத்து வெங்காயம், மிக்ஸர், கொத்தமல்லித் தூவி இறக்கவும்.